எனவே சுகுமார், புத்திஜீவி ஆவது பற்றியெல்லாம் யோசிக்க வேண்டாம். எல்லாத் துறைகளிலும் அயோக்கியர்களும் நல்லவர்களும் உள்ளனர். இஸ்ரோவில் நடந்திருக்கும் ஊழல் இரண்டு லட்சம் கோடி என்கிறார்கள். அதில் ஈடுபட்டுள்ள எல்லோரும் வானளாவப் படித்தவர்கள். வாசிப்பு என்பது நெருப்பைப் போன்றது. நல்லவனிடம் கிடைத்தால் அகல் விளக்கை ஏற்றி இருட்டில் ஒளி ஏற்றுவான்; தீயவனிடம் கிடைத்தால் அதையே ஆயுதமாகப் பயன்படுத்தி நாட்டையும் வீட்டையும் கொளுத்துவான்.
http://www.vallinam.com.my/issue27/charubathilgal.html