Friday, October 7, 2011

ஒரு எலுமிச்சை பழமும் ஒன்பது பச்சைமிளகாய்களும்...

பல அலுவலகங்களில் வெள்ளிகிழமைகளில் ஒரு எலுமிச்சை பழத்தையும் ஒன்பது பச்சைமிளகாய்களையும் ஒரு நூலில் கோர்த்து வாசலில் கட்டி வைப்பதை பார்கிறேன்... மேலும் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதில் குங்குமத்தை தடவி வாசலில் வைக்கிறார்கள் இவை ஏன் என்று கேட்டால் தொழில் நன்றாக நடப்பதற்க்கு என்று கூறுகிறார்கள்...

ஒரு தொழில் நன்றாக நடப்பதற்க்கு...

அந்த தொழிலை நடத்துபவர் நேர்மையானவராக இருக்க வேண்டும்,

சொன்ன சொல்லை காப்பவராக இருக்க வேண்டும்,

தன்னை நம்பி வருபவர்களின் நிலையை உணர்ந்தவராக இருக்க வேண்டும்,

தன்னிடம் வேலை பார்பவர்களிடம் முறையான communication கொள்பவராக இருக்க வேண்டும்,

தன்னிடம் வேலை செய்பவர்கள் ஒழுங்காகதான் வேலை செய்கிறார்களா? (அல்லது இது போல் பதிவு போட்டு கொண்டிருக்கிறார்களா?) அவர்கள் செய்யும் வேலையால் company என்ன பயன் அடைகிறது என்றெல்லாம் கவணிப்பவராக இருக்க வேண்டும்,

வேலையாட்களின் யோசனைகளையும் அவர்களின் குறைகளையும் செவிமடுப்பவராக இருக்க வேண்டும்,

தன் Company யின் ethics என்ன என்ன என்கிற தெளிவு உடையவராக இருக்க வேண்டும்,

Company வளர்ச்சியை நோக்கி போகிறதா என்று கவணிப்பவராக இருக்க வேண்டும்,

உழைப்பு, முயற்ச்சி, மற்றவர்களை புரிந்து கொள்ளுதல் - இத்தகைய குணங்களை கொண்டவராக இருக்க வேண்டும்,

இவை எல்லாம் ஒரு தொழிலை (company) முன்னேற்றும் என்று கூறினால் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது...

ஆனால்...

இவை எதுவும் இல்லாமல் ஒரு எலுமிச்சை பழமும் ஒன்பது பச்சைமிளகாய்களும் ஒரு தொழிலை முன்னேற்றும் என்று கூறினால் அது எப்படி என்று எவ்வளவு யோசித்தாலும் எனக்கு புரிய மாட்டேன்கிறது...

மனக் குருடு...

மற்றவர்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ளாதவர்களை,
அடுத்தவர்கள் பற்றி அக்கறையில்லாதவர்களை,
செய்யும் வேலையில் அசட்டையாய் இருப்பவர்களை,
மற்றவர்களின் உழைப்பை சுரண்டி அதில் கொழுத்து போவோர்களை,
அவர்களின் விசுவாசிகளை,
தங்களுக்கு லாபம்தரும் விதிகளை மட்டும் கடைபிடிப்பவர்களை,
அதை மிக பெருமையாக கூறி கொள்பவர்களை,
தங்களின் சொரனை அற்ற தன்மைக்கு பொறுமை என்று பெயரிடுபவர்களை,
எல்லாம் தெரிந்த புத்திசாலிகளை போல் பேசும் முட்டாள்களை,
நியாயவான்களை போல் பேசும் அயோக்கியர்களை,
தங்களுடைய தவறுகளை சமாளிக்க வீணான நம்பிக்கைகளை தருபவர்களை,
தங்களுடைய தவறுகள் குறித்து எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இல்லாதவர்களை,

இவர்கள் எல்லோரையும் நான் (மிக அதிகமாகவே) வெறுக்கிறேன்...

நிறக்குருடு (Colour blindness) என்பது மனிதர்களில் சிலரால் பெரும்பாலானவர்களைப்போல சில நிறங்களுக்கிடையேயானவேறுபாடுகளை உணர இயலாமையைக் குறிக்கும் சொல்.