Friday, October 7, 2011
ஒரு எலுமிச்சை பழமும் ஒன்பது பச்சைமிளகாய்களும்...
மனக் குருடு...
அடுத்தவர்கள் பற்றி அக்கறையில்லாதவர்களை,
செய்யும் வேலையில் அசட்டையாய் இருப்பவர்களை,
மற்றவர்களின் உழைப்பை சுரண்டி அதில் கொழுத்து போவோர்களை,
அவர்களின் விசுவாசிகளை,
தங்களுக்கு லாபம்தரும் விதிகளை மட்டும் கடைபிடிப்பவர்களை,
அதை மிக பெருமையாக கூறி கொள்பவர்களை,
தங்களின் சொரனை அற்ற தன்மைக்கு பொறுமை என்று பெயரிடுபவர்களை,
எல்லாம் தெரிந்த புத்திசாலிகளை போல் பேசும் முட்டாள்களை,
நியாயவான்களை போல் பேசும் அயோக்கியர்களை,
தங்களுடைய தவறுகளை சமாளிக்க வீணான நம்பிக்கைகளை தருபவர்களை,
தங்களுடைய தவறுகள் குறித்து எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இல்லாதவர்களை,
நிறக்குருடு (Colour blindness) என்பது மனிதர்களில் சிலரால் பெரும்பாலானவர்களைப்போல சில நிறங்களுக்கிடையேயானவேறுபாடுகளை உணர இயலாமையைக் குறிக்கும் சொல்.
Friday, July 22, 2011
துன்பம் நேர்கையில்...
Saturday, July 16, 2011
சாரு பதில்கள்
சுகுமார் R
கேள்வி: இலக்கியம் கீழ்மையைக் கற்றுத் தருகிறதா? அல்லது, எனக்குள் உள்ள கீழ்மையை அடையாளம் கண்டு கொள்ள உதவுகிறதா?
பதில்: சுகுமார், இதே கேள்வியை சற்று மாற்றிக் கேட்டுப் பார்ப்போம். உலகில் சிலர் தங்களை எரியூட்டிக் கொண்டு மாண்டு போகிறார்கள். சிலர் மற்றவர்கள் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக் கொல்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுபோல் பல வரதட்சணைக் கொலைகள் நடந்துள்ளன. அப்படியானால் நெருப்பு ஒரு அழிவு சக்தியா? இலக்கியமும் அதைப் போன்றதுதான். யார் எப்படிப் பயன்படுத்துகிறார்களோ அதைப் பொறுத்து அமைகிறது அதன் வினை. சிலர் தங்களுடைய வாசிப்பு அறிவை ஒரு பயங்கர ஆயுதமாகப் பயன்படுத்துவதைக் கண்டிருக்கிறேன். இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. இலக்கியம் உங்களுக்குள் அறிவாக சேகரம் ஆகிறதா அல்லது ஞானமாகவா? ஞானமாக சேகரமானால் நாம் மேலும் மேலும் பண்படுவோம். அப்படி அல்லாமல் அறிவாக மட்டுமே சேகரமானால் அந்த அறிவு மற்றவர்களையும் நம்மையும் சேர்த்து அழித்து விடும். உங்கள் இரண்டாவது கேள்விக்கும் இதிலேயே பதில் இருக்கிறது.
Thursday, March 3, 2011
சாரு பதில்கள்
http://www.vallinam.com.my/issue27/charubathilgal.html