Friday, July 22, 2011

துன்பம் நேர்கையில்...

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? எனக்கு இன்பம் சேர்க்க மாட்டாயா? என்ற இந்த பாடல் பாரதிதாசனால் எழுதப்பட்டது. இந்த பாடலுக்கு “தேஷ்” ராகத்தில் வர்ண மெட்டு அமைக்க தனக்கு இரண்டு வருடங்கள் ஆனாதாக திரு. தண்டபாணி தேசிகர் கூறியுள்ளார். ஏனென்றால் இந்த பாடலின் ஜீவனுக்கு பங்கம் ஏற்படாமல் பாட வேண்டுமானால் அதற்கேற்ற (மென்மையான) ராகம் தேவை. இதே பாடலை “அடனா” ராகத்தில் பாடினால் அது குழந்தையை பயமுறுத்துவதாக அமைந்துவிடும் என்று அவர் நகைசுவையோடு குறிப்பிடுகிறார். எனவே இதற்கான சரியான ராகத்தை தான் கண்டு கொள்ள இரண்டு வருடம் எடுத்து கொண்டதாக கூறுகிறார்.

இரண்டு வருடம் ஒரு பாடலுக்காக சிந்தித்துள்ளார் என்றால் அவர் அவருடைய கலையின் மேல் எவ்வளவு தீவிர பற்று வைத்திருப்பவராக இருந்திருக்க வேண்டும். எனக்கெல்லாம் ஒரு சாதாரண விசையத்தை செய்வதற்கே அலுப்பு தட்டி விடுகிறது. அப்படி இருக்க இரண்டு வருட காலங்கள் ஒரு பாடலுக்கு ராகம் அமைக்க எடுத்து கொண்டார் என்றால் அவருடைய உழைப்புதான் எத்தகையது. அவருடைய அர்பணிப்புதான் எத்தகையது.
மனதை, ஒரு பொருளின் மேலோ அல்லது ஒரு விசையத்தின் மேலோ தொடர்ந்து செலுத்துவதற்க்கு ஒரு தனி ஈடுபாடு தேவைப்படுகிறது. ஒரு அர்பணிப்புணர்வு தேவைப்படுகிறது. அத்தகைய உணர்வுகள் இல்லாதவர்களுக்கு எந்த விசையத்திலும் கற்று கொள்ள ஆர்வமோ, சாதனைக்கான முயற்ச்சியோ இல்லாமல் போகிறது.

கற்று கொள்பவனை சாதகன் என்று நாம் சொல்லுகின்றோம். எதை கற்று கொண்டாலும் அதை முழு மனதுடனும், அர்பணிப்புணுர்வுடனும் கற்று கொண்டால் அந்த கலை சாதகனுக்கு கைவசமாகிறது. மனதை எவ்வாறு முழுமையாக ஈடுப்படுத்துவது என்பது கேள்வியாக இருக்கும் பட்சத்தில் சாதகன் அதையும் கற்று கொள்ள வேண்டிய நிலையிலேயே இருக்கின்றான்.

No comments:

Post a Comment